search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊட்டச்சத்து பொருட்கள்"

    • கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் எம்.எல்.ஏ. வழங்கினார்.
    • 150 கர்பிணிகளுக்கு வளையல் அணிவித்து 5 வகையான உணவு வகை களை பரிமாரினார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே கொங்கம்பட்டி ஊராட்சி இடையவலசை கிராமத்தில் தமிழக அரசின் வரும்முன் காப்போம் திட்டம் தொடங்கியது. இதில் நடைபெற்ற மருத்துவ பரிசோதனை முகாம்மை மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

    அதை தொடர்ந்து முகாமில் கலந்து கொண்ட கர்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து உணவு பொருள்கள் அடங்கிய மருந்து பெட்ட கங்களை வழங்கினார்.

    பின்னர் இளையான்குடி நகரில் நடை பெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் 150 கர்பிணி பெண் களுக்கு வளையல் அணிவித்து 5 வகையான உணவு வகை களை பரிமாரினார்.

    விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ சுபமதியரசன், பேரூராட்சி செயல் அலுவலர் கோபிநாத் மற்றும் வட்டார ஊட்டச்சத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் சார்பில் காசநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊட்டச்சத்து நல உதவி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
    • வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் முத்தமிழ் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் 15 பேருக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே காரிப்பட்டி பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் சார்பில் காசநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊட்டச்சத்து நல உதவி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

    வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் முத்தமிழ் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் 15 பேருக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்பட்டது. துணை இயக்குனர், காசநோய் மருத்துவர் கணபதி அறிவுறுத்தலின்படி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் கண்ணா முன்னிலையில் நடந்த முகாமில் சித்த மருத்துவர், பல் மருத்துவர், சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவமனை பணியாளர்கள், செவிலியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்கு பெற்றனர்.

    இந்த நிகழ்ச்சியில் காசநோய் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. பின்னர் செவிலியர்கள், கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட காசநோய் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    • திருச்சி புனித அன்னாள் சபை நிறுவனர் அன்னை அன்னம்மா நினைவாகவும், தலைமை அன்னையின் பொன்விழா நிறைவாகவும் கீழையூர் மற்றும் தலைஞாயிறு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது‌.
    • வேளாங்கண்ணி சிறப்பு முதல் நிலை பேரூராட்சி துணைத்தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன், கீழையூர் ஒன்றிய பெருந்தலைவர் செல்வராணி ஞானசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நாகப்பட்டினம்:

    திருச்சி புனித அன்னாள் சபை நிறுவனர் அன்னை அன்னம்மா நினைவாகவும், தலைமை அன்னையின் பொன்விழா நிறைவாகவும் கீழையூர் மற்றும் தலைஞாயிறு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது‌.

    கீழையூர் அருகே காமேஸ்வரத்தில் உள்ள கோஹஜ் மருத்துவமனையில் சபைத் தலைவர் ரெஜினாள் தொடங்கி வைத்தார்‌. வேளாங்கண்ணி சிறப்பு முதல் நிலை பேரூராட்சி துணைத்தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன், கீழையூர் ஒன்றிய பெருந்தலைவர் செல்வராணி ஞானசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் திருப்பூண்டி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் அரவிந்த்குமார், மருத்துவர் சங்கீதா, மாவட்ட கவுன்சிலர் கவுசல்யா இளம்பரிதி, ஒன்றிய துணை பெருந்தலைவர் சவுரிராஜ், காமேஸ்வரம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயசுதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் 60 பயணாளிகள் பயனடைந்தனர்.

    ×